சென்னையில் ஓரிரு நாளில் மீண்டும் குழாய் மூலம் குடிநீர்
சென்னை:
சென்னை மக்கள் இன்னும் ஓரிரு நாட்களில் குழாய் மூலம் குடி நீரைப் பெறவுள்ளனர்.
சென்னையில் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு குடி நீர் பிரச்சனை ஏற்பட்டது. அதேகோடைக் காலத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சந்தித்த முதல் பிரச்சனையும் இதுதான்.
இதையடுத்து, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீ"ர் மற்றும் நெய்வேலி, ஈரோடு நகரங்களில் இருந்து லாரிகள்மூலம் குடி நீர் என்று பல அதிரடித் நடவடிக்கைகளை அடுத்து, ஓரளவு குடி நீர் பிரச்சனை தீர்ந்தது.
இருந்தாலும், அவ்வப்போது சென்னை நகர மக்கள் காலி தண்ணீர் குடங்களுடன், குடி நீர் கேட்டுப் போராடிவந்தனர். குடி நீர் பிரச்சனை படு பயங்கரமாகவே தலை விரித்து ஆடியது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த பருவ மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் ஏரிகளில் நீர் வரத்துஅதிகமாகத் தொடங்கியது.
இதையடுத்து, சென்னை நகர மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் தர குடிநீர் வாரியம் தயாராகி விட்டது.
இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை நகர மக்கள் தங்கள் வீட்டுக் குழாய்களில் இருந்தே குடி நீர் பெற்றுக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications