எத்தனை தடவை ஓட்டு போட்றது! மறுவாக்குப் பதிவை புறக்கணிக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

திருத்தணி:

திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இன்று நடந்த மறுவாக்குப் பதிவை அந்தக் கிராமப் பொதுமக்கள்புறக்கணித்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில்18ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டவாக்குப் பதிவு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 18ம் தேதியன்று திருத்தணி அருகே உள்ள தும்பிக்குளம் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குதேர்தல் நடத்தப்பட்டது.

அப்போது கள்ள ஓட்டுப் போட ஒரு கும்பல் முயன்று, அதை மற்றொரு கும்பல் தடுத்து நிறுத்த முயன்றதால் கலவரம்வெடித்தது. வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. இதனால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு தும்பிக்குளம் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் மறுவாக்குப் பதிவிற்கானஏற்பாடுகளைச் செய்து வைத்து பொதுமக்களின் வருகைக்காகத் தயாராகக் காத்திருந்தார்கள்.

ஆனால் காலையிலிருந்து இதுவரை ஒருவர் கூட வாக்குச்சாவடிப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டதற்கு, தேவையில்லாமல் வன்முறையை ஏற்படுத்தி அமைதியைக் குலைத்தனர்.அந்த வன்முறையை போலீசால் தடுக்க முடியவில்லை. இப்போது மீண்டும் தேர்தல் நடத்துவதாகக் கூறுகிறார்கள்.ஒரு தேர்தலுக்கு எத்தனை தடவை வாக்களிப்பது என்றனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்டக் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தும்பிக்குளம் விரைந்து,பொதுமக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சமாதானப் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+