ராஜஸ்தான் எல்லையில் பாக். பதுங்கு குழிகள் அமைப்பு
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் பதுங்கு குழிகள் அமைத்து வருவதால் அந்தப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய-பாகிஸ்தான் எல்லை உள்ளது. இந்த எல்லைக் கோட்டிலிருந்துசுமார் 100 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 அடுக்குகளைக் கொண்ட பாதாள அறைகளைஅமைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில்,
நமது எல்லைக் கோட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 அடுக்குகளைக்கொண்ட பதுங்கு குழிகள் அமைத்து வருகிறார்கள்.
மேல் தளத்தில் பாகிஸ்தானிய கண்காணிப்பு அதிகாரிகள் இருப்பார்கள் என்றும், அதற்கு அடுத்த தளத்தில்வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற ராணுவத் தளவாடச் சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் என்றும் கீழ்தளம் ஓய்வு எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. இதனால் எல்லையில் பாதுகாப்புப்பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் காஷ்மீரில் ஒரே இரவில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 11 பதுங்கு குழிகளை இந்தியா தகர்த்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. நேற்ற இரவும் 3 பதுங்கு குழிகளை இந்தியா தாக்கி அழித்தது.
இந் நிலையில் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பதுங்கு குழிகளை அமைக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications