இந்தியாவில் அடுத்த ஆண்டு இன்டர்நெட் தொலைபேசி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மத்திய அரசுதொடங்கும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பிரமோத் மஹாஜன் கூறினார்.
தொழில் நுட்ப வசதியுடன், அதே சமயத்தில் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி வசதி மக்களுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே அரசின் லட்சியம்.
அதற்காக இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்துதொடங்குகிறது. இந்த இன்டர்நெட் தொலைபேசி திட்டத்தில் விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிட்ெ (வி.எஸ்.என்.எல்)முதலீடு செய்யாது.
இன்டர்நெட் தொலைபேசி சேவையால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications