உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் பணி மொத்தம் 951 மையங்களில் ஞாயிற்றுக்கிழமைதொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த 16 மற்ம் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 16ம் தேதிநடந்த வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 306 இடங்களில் மறுவாக்குப் பதிவு கடந்த 19ம்தேதி நடைபெற்றது. அதேபோல 18ம் தேதி நடைபெற்ற வன்முறைகள் காரணமாக மறுவாக்குப் பதிவு இன்று(சனிக்கிழமை) 193 இடங்களில் நடக்கிறது.

இந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் பதிவாகிய வாக்குகள் அனைத்தையும் எண்ணும் பணிஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 951 இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடக்கவிருக்கிறது.

இதில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, லயோலா கல்லூரிஆகியவை உள்ளிட்ட 11 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 940மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.

நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் இந்தப் பணி, நாளை மறுநாள் மாலை வரை நீடிக்கலாம் என்றஎதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 3 மணிவாக்கில் முடிவுகள் வரத்தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குச் சீட்டின் பின்புறத்தில் தேர்தல் அதிகாரியின் கையெழுத்தை அடையாளமாக வைத்து கள்ள ஓட்டுக்களைப்பிரிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதனால் பெரும்பாலான கள்ள ஓட்டுகளை நீக்கிவிட முடியும்.

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+