தேர்தல் முறைகேடு: அதிகாரிகளை அழைத்து கவர்னர் தீவிர விசாரணை
டெல்லி:
உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்று திமுக சார்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தமிழகதலைமைச் செயலாளர் மற்றும் தேர்தல் கமிஷனர் ஆகியோரிடம் கவர்னர் ரங்கராஜன் விசாரணை நடத்தினார்.
சென்னை மறறும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவுநடைபெறும்போதும், வாக் எண்ணிக்கையின் போதும் அதிமுகவினர் முறைகேடு செய்ததாக திமுக சார்பில் மத்தியஅரசுக்ம், கவர்னருக்கும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் சென்னை மேயர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் அதிமுகவினர் முறைகேடு செய்ததாகவும், ஸ்டாலின்தோற்றுவிட்டார் என்று அறிவிக்க அவர்கள் அதிகாரிகளை வற்புறுத்தியதாகவும் திமுக சார்பில் கவர்னரிடம் மனுகொடுக்கப்பட்டது. பிறகு கவர்னர் தலையிட்டதால் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டதாககூறப்படுகிறது.
இந்நிலையில் கவர்னர் தமிழக தலைமைச் செயலாளரையும், தேர்தல் கமிஷனரையும் தன்னை வந்து சந்திக்கு ாறுஉத்தரவிட்டார். இதையடுத்து தேர்தல் அதிகாரி பாண்டியன் நேற்று முன்தினம் கவர்னரைச் சந்தித்தார். அவரிடம்தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கவர்னர் விசாரணை செய்தார் என்று கூறப்படுகிறது.
மேலும் திமுக தரப்பில் கூறப்பட்டள்ள புகார்களுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும்கேட்டறிந்தார். மேலும் தன்னிடம் உள்ள புகார்களையும் தேர்தல் கமிஷனரிடம் கொடுத்து அதற்கு விரிவானவிளக்கம் அளித்து அறிக்கை கொடுக்குமாறும் கவர்னர் கேட்டுக்கொண்டார்.
இதேபோல தலைமைச் செயலாளர் சங்கரும் கவர்னரைச் சந்தித்தார். ஆனால் இவர் அளித்த விளங்கங்களால்கவர்னர் திருப்தி அடையவில்லை என்ற கூறப்படுகிறது.
மேலும், நன்றாக விசாரணை செய்து சரியான விளக்கங்களுடன் அறிக்கை அளிக்குமாறு சங்கரிடம் கவர்னர்கேட்டுக்கொண்டார்.
இந்த 2 அதிகாரிகளின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து, தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தனக்குக்கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்ககவர்னர் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications