விமானக் கடத்தல்: யு.ஏ.ஈலிருந்து சென்ற 1 லட்சம் டாலர்

Subscribe to Oneindia Tamil

அபுதாபி:

அமெரிக்காவில் விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்திய 11 தீவிரவாதிகளுக்கு யு.ஏ.ஈ. நாட்டின் வங்கியில்இருந்து 1 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணம் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பணம் யு.ஏ.ஈயின் சென்ட்ரல் வங்கியில் இருந்து புளோரிடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சென்ட்ரல் வங்கியின் கவர்னர் சுல்தான் பின் நாசர் அல்-சுவைதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

யு.ஏ.ஈயின் ஒரு பணம் மாற்று மையத்திலிருந்து புளோரிடாவில் உள்ள ஒரு வங்கிக்கு சென்ட்ரல் வங்கி மூலமாகஇந்தப் பணம் சென்றுள்ளது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 4 முறை பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கும்பலுக்கும் யு.ஏ.ஈக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள்நாட்டை யாராவது குறை கூறினால் முதலில் அமெரிக்காவையும் அவர்கள குறை கூற வேண்டும். நாங்கள்இவர்களுடன் வங்கிக் கணக்கு தொடர்பான உறவு மட்டும் தான் வைத்திருந்தோம். ஆனால், அமெரிக்காஇவர்களுக்கு விமானம் ஓட்ட பயிற்சியே அளித்திருக்கிறது என்றார்.

விமானத் தாக்குதலில் ஈடுபட்ட முகம்மத் அட்டாவுக்கும், மர்வான் அல்-ஷெகிகிக்கும் (இவர் யு.ஏ.ஈ. நாட்டைச்சேர்ந்தவர்) சிட்டி பேங்க் மற்றும் எச்.எஸ்.பி.சியில் வங்கிக் கணக்குகள் இருந்தன. அமெரிக்காவுக்கு செல்லும்முன்பே யு.ஏ.ஈ. நாட்டில் இந்த வங்கிக் கணக்குகளை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+