கருணாநிதிக்கு மனப் பக்குவம் இல்லையே: வருத்தப்படுகிறார் ஜெ.
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருணாநிதி சொல்வதைப் போல என்னுடைய போயஸ் தோட்ட இல்லத்தில் எந்தசதி ஆலோசனையும் நடத்தவில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடத்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவினர் சதி ஆலோசனைசெய்தததாக திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
இதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை)சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு முதன்மை நிலையை வழங்கி இருப்பதைப்பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி அதிமுக மீது பல குற்றச்சாட்டுக்களைக் கூறிவருகிறார்.
வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன என்றும், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றது என்றும்,வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்றும் தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருக்கிறார்.
மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேராக உள்ள உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகளுக்கு, அவை வெற்றிஆயினும் சரி, அல்லது தோல்வி ஆயினும் சரி அதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றமனப்பக்குவம் அற்றவராக கருணாநிதி இருக்கிறார்.
கருணாநிதி தற்போது நிதானமிழந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். எடுத்துக் காட்டாக சென்னைமேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதிமுக வேட்பாளர் முன்னணியில்இருக்கிறார் என்றவுடன், ஆளுங்கட்சியினர் அராஜகம், வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்றுஅதிமுகவினர் மீது சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.
பிறகு அடுத்த நாள் அவரது மகன் ஸ்டாலின் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன், ஜனநாயக அகல் விளக்குஏற்றப்பட்டது என்று பத்திரிக்கைகளில் கால் பக்க அளவிற்கு விளம்பரம் கொடுத்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடத்த அதிமுகவினர், போலீசாருடன் சேர்ந்து சதித்திட்டம்தீட்டியதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கூறிவருகிறார்.
என்னுடைய போயஸ் தோட்ட இல்லத்தில் எந்த சதி ஆலோசனையும் நடைபெறவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்மீது இத்தகைய பொய் பிரச்சாரத்தில் கருணாநிதி மீண்டும் ஈடுபட்டால் கழக உடன்பிறப்புக்கள் ஒருபோதும்சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications