இந்தியா: தீவிரவாதிகளுக்கு உதவினால் பாஸ்போர்ட் ரத்து
டெல்லி:
தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களின் பாஸ்போர்ட்களை ரத்தும் செய்யும் அதிகாரத்தை மத்திய-மாநில அரசுகளுக்கு வழங்கும் புதிய சட்டத் திருத்தம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1967ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தில் தற்போது திருத்தம்செய்யப்பட்டுள்ளது. அதாவது, தீவிரவாதிகளோ, அவர்களுக்கு உதவுபவர்களோ கண்டுபிடிக்கப்பட்டால்அவர்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய- மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்டவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை 4வாரங்களுக்கு ரத்து செய்யலாம். தேவைப்பட்டால் மேலும் 4 வாரங்களுக்கு ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு.இதற்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் மீண்டும் நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நோட்டீசு அனுப்ப வேண்டும் என்று அந்த சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது.