சிவகங்கை அருகே பா.ஜ.க. கவுன்சிலர் கடத்தல்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கவுன்சிலர் கடத்தப்பட்டார்.
அவரை ஒன்றியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் த.மா.கா. கவுன்சிலர் கடத்திவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் 11 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தின் தலைவர்பதவிக்கு த.மா.காவின் நாத்திச்சேரி வீரப்பன் போட்டியிடுகிறார்.
இவர் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலரான பழனிச்சாமியைக் கடத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 31ம் தேதி ஒன்றியத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்குள் கடத்தப்பட்டுள்ள பழனிச்சாமியை போலீசார் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும், அவ்வாறுகண்டுபிடித்துத் தராவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க.பொதுச் செயலாளருமான ராஜா அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனிச்சாமி எதிர் தரப்புக்கு வாக்களித்துவிடாமல் தடுக்கவே அவரை வீரப்பன் கடத்தி வைத்திருப்பதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications