தமிழகத்தில் பலத்த மழைக்கு 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைபெய்து வருகிறது.

குறிப்பாக வட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது.

வட கிழக்கு பருவ மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதில் நெல்லை மாவட்டம் தச்சநல்லூர்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மின்னல் தாக்கி இறந்தனர். இதுதவிர கோவை, பல்லடம், ஈரோடு ஆகிய பகுதிகளிலும்மழைக்குப் சிலர் பலியாகியுள்ளனர்.

இந்த மழை மேலும் 36 மணி நிேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வட மாவட்டங்கள்மற்றும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை நீடிக்கும்:

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு முழுவதிலும் தூறல் நீடித்தது. நகரின்தாழ்வான பகுதிகள் தொடர்ந்து மழை நீரில் மூழ்கியுள்ளன.

வேளச்சேரியில் மழை நீர் சூழ்ந்துள்ள கைவேலி பகுதியில், தெர்மகூல் அட்டைகளை படகுகள் போலப் பயன்படுத்தி போக்குவரத்தில்ஈடுபட்டுள்ளனர் அப்பகுதி பொதுமக்கள். இந்தப் பகுதி ஆக்கிரமிப்புப் பகுதி என்பதால் அரசுத் தரப்பில் எந்தவித சாலை வசதியும், மின்சாரவசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+