100 சதவீத வெற்றி- திருநாவுக்கரசு பெருமிதம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. நூறு சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று அக்கட்சியின்தலைவர் திருநாவுக்கரசு பெருமையுடன் கூறினார்.
சென்னையில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது, அவர் மேலும் கூறியதாவது,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி நின்ற அனைத்து இடங்களிலும் வென்றுள்ளது. நாங்கள் திமுககூட்டணியில் 15 இடங்கள் கேட்டோம். ஆனால் அவர்கள் 2 இடங்கள் மட்டுமே கொடுத்தார்கள். இதில் வருத்தம்இருந்தாலும், அதைப் பெற்றுக் கொண்டு அந்த இரண்டிலும் வெற்றிபெற்றோம்.
கடந்த எம்.பி. தேர்தலில் 3 இடங்கள் தரப்பட்டு, 2 இடங்களில் வெற்றிபெற்றோம். எம்.எல்.ஏ. தேர்தலில் புதிதாகவந்த கட்சிகளுக்கெல்லாம் கூடுதல் இடங்கள் தரப்பட்டன. இதில் எங்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.
இருப்பினும் தேசிய ஜனநாயக்கூட்டணியில் பிளவு ஏற்படக் கூடாது என்பதற்காக நாங்கள் எங்களுக்கு கொடுத்தஇடங்களைப் பெற்றுக் கொண்டோம்.
இப்போதும் அதேபோல குறைவான சீட்டுக்கள் தான் வழங்கப்பட்டன. ஆனால் அதில் முழுமையாக வெற்றிபெற்றுள்ளோம்.
பஞ்சயாத்து யூனியன் தலைவரை மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும்.அப்போது தான் ஆள்தூக்கும் வேலை நடக்காது. இதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.