பெண் போலீசிடம் தகாக முறையில் நடந்து கொண்ட சப் -இன்ஸ்பெக்டர்கள்
திருச்சி:
பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, அவர்கள் கற்புக்கு பங்கம்விளைவிக்க 4 போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம்திருச்சியில் நடந்துள்ளது.
1991முதல் 1996ம் ஆண்டுவரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திருச்சிகன்டோன்ட் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், வரதட்சணை கொடுமைஉள்ளிட்டவற்றிக்கு எதிராக நடவடிக்கைஎடுத்து பெண்களுக்கு பாதுகாப்பாக செயல்படதமிழகம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் காவல் பணியில்ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் தகாத முறையில் நடந்துகொண்டு, அவர்களை பலாத்காரம் செய்ய முயன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் திருச்சியில்நடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:
கடந்த19ம் தேதி இரவு கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு கரூவூலத்தில் காவல்பணியில் 3 பெண் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் குடித்துவிட்டு போதையுடன் அங்கு வந்து பெண்போலீசாரை கேலி செய்துள்ளனர். அவர்கள் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பெண்போலீசாரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
பயந்துபோன பெண் போலீசார் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். அவர்கள் சத்தத்தைக்கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவிக்காக ஒடி வந்தனர்.
பொதுமக்கள் ஓடி வந்தை கண்ட 3 போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்களும் தப்பி ஓடி விட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் செயல் குறித்து கலெக்டர் அலுவலக வாட்ச்மேன் உடனடியாகபோலீஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த விதமானநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து பெண் போலீசார் மூவரும், இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர்பன்னீர்செல்வத்துக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் புகார் மனுஅனுப்பியுள்ளனர்.
இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு திருச்சி மாநகர போலீஸ்உதவி கமிஷனர் மாணிக்கவாசகத்துக்கு உத்தரவிட்டார் கமிஷனர்.
முதல் கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம், அவர்களிடம்பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களின் பெயர்என்ன என்பது குறித்த்து விசாரித்து அறியப்பட்டது.
குற்றம் சாட்டப்ப்டடுள்ள 4 சப்-இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடைபெறவுள்ளது.