பாகிஸ்தானில் 16 கிறிஸ்தவர்கள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ஒரு சர்ச்சில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுநடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் கிழக்குப் பஞ்சாப் மாகாணத்தில் பஹவால்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவதேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பல கிறிஸ்தவ மக்கள் கூடி பிரார்த்தனை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது 6 பேர் கொண்ட ஒரு தீவிரவாதக் கும்பல் மோட்டார் பைக்குகளில் வந்து தாங்கடள வைத்திருந்தஆட்மோடிக் ரகத் துப்பாக்கிளால் சராமாரியாகக் கூட்டத்தினர் மீது சுட்டனர்.

இதில் பிரார்த்தனை செய்து கொண்டிந்த 16 பேர் அந்த இடத்திலேயே குண்டடி பட்டு உயிரிழந்தனர். மேலும் 12பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்தக் கோரத் தாக்குதல்பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக, மதப்பிரச்சனைகளைக் கிளப்பவே முஸ்லீம்மதத் தீவிரவாதிகள் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+