சுவாரஸ்யமான கட்டத்தில் மதுரை துணை மேயர் தேர்தல்
மதுரை:
மதுரை மாநகராட்சியில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு 36 கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதாககூறி வருவதால் மதுரை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான தேர்தல் சுவாரஸ்யமான கட்டத்தைஅடைந்துள்ளது.
மேலும் துணை மேயர் தேர்தலில் மேயர் வாக்களிக்கு முடியுமா என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது.
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. துணைமேயருக்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெறவுள்ளது.
மதுரை மாநகராட்சியிலுள்ள கவுன்சிலர்களின் மொத்த எண்ணிக்கை 72. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமேதங்களுக்கு 36 கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருவதால் துணை மேயர் தேர்தல் சுவாரஸ்யமானகட்டத்தை அடைந்துள்ளது.
சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது முதல்வர் வாக்களிக்கலாம். ஆனால் மாநகராட்சியில் வாக்கெடுப்புநடந்தால் மேயர் வாக்களிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது இரு கட்சியினருமே தங்களுக்க சமமான ஆதரவு உள்ளது என்று கூறுவது உண்மையானால் துணைமேயர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்நிலையில் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு பணம் கொடுப்பதாகவும், பதவி கொடுப்பதகாவும் இரு கட்சியனரும்கூறி அவர்களை விலை பேசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications