31-ம் தேதி மாநகராட்சிகளில் துணை மேயர் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான துணை மேயர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் 31ம் தேதிமறைமுகத் தேர்தல் மூலம் நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சிகளுக்கான மேயர்கள், நகராட்சிகளுக்கான தலைவர்கள் கடந்த 25ம் தேதிபதவியேற்றனர்.
அன்றே கவுன்சிலர்களும் பதவியேற்றனர். இந் நிலையில் துணை மேயர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவரும் 31ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 25 ம் தேதி பதவியேற்றுக் கொள்ளாத கவுன்சிலர்களும், வரும் 31ம் தேதி தேர்தலில் வாக்களித்து தங்களது துணைத்தலைவர்களைத் தேர்வு செய்ய முடியும் என்று தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications