அதிமுகவில் "மிசா" பாண்டியன்: துணை மேயர் பதவி கிடைக்குமா?
மதுரை:
மிசா பாண்டியன் உள்ளிட்ட 4 சுயேச்சை கவுன்சிலர்கள் அதிமுகவில் சேர்ந்துள்ளதால் அக் கட்சிக்கு துணை மேயர்பதவியைப் பிடிக்கத் தேவையான அளவுக்கு கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதையடுத்து மிசா" பாண்டியன் மீண்டும் மதுரை மாநகர துணை மேயராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மிசா" பாண்டியன் மற்றும் 3 சுயேச்சைகள் அதிமுகவில் இணைந்திருப்பதன் மூலம், மதுரை மாநகராட்சியில் அதிமுககூட்டணியின் பலம் 40 ஆக உயர்ந்துள்ளது.
அடாவடி ஆசாமி:
திமுகவில் மிக முக்கிய புள்ளியாக விளங்கியவர் பாண்டியன். கடந்த முறை திமுக சார்பில் துணை மேயராகஇருந்தார். அடாவடி ஆசாமியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகள் பதிவானதால்சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இவரைக் கட்சியைவிட்டு நீக்கியது திமுக.
ஆனால், இவர் இப்போதும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழரியின் தீவிர ஆதரவாளர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கொலை வழக்கு காரணமாக தேடப்பட்டபோது பல மாதங்கள் தலைமறைவாக இருந்துவிட்டு நீதிமன்றத்தில்ஆஜராகி விடுதலையானார்.
வழக்குகளில் இருந்து தப்பிக்க...
கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். அழகிரியின் ஆதரவும் இவருக்கு இருந்தது.
இப்போது துணை மேயர் பதவியை மனதில் கொண்டும், தன் மீதுள்ள கொலை வழக்குகளில் இருந்து தப்பிக்கவும்தான் அதிமுகவில் சேர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அதிமுக தரப்பில் மீண்டும் "மிசா" பாண்டியனே துணை மேயர் தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் நிலவரம்:
அதிமுக கூட்டணி - 37
அதிமுக - 26
இந்திய கம்யூனிஸ்ட் - 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5
தமாகா - 5
திமுக கூட்டணி - 32
திமுக - 30
பாஜக - 2
சுயேச்சைகள் - 3
மொத்தம் - 72












Click it and Unblock the Notifications