மதுரை அருகே நடு ரோட்டில் கிடந்த பெண் குழந்தையின் பிணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே நாயால் கடித்து குதறப்பட்டு சிதைந்து கிடந்த பெண் குழந்தையின் உடல் நடுரோட்டில் கிடந்தது.
திருமங்கலம் அருகிலுள்ள முகமத்ஷா புரத்தில்தான் இந்த குழந்தையின் உடல் கிடந்தது.
இந்த குழந்தையின் இரு கைகளின் சதைகளையும் நாய் முழுவதுமாக கடித்து தின்று விட்டதால் இந்த குழந்தையின்பிணத்தைப் பார்க்க மிகவும் கோரமாக இருந்தது.
இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த குழந்தை யாருக்கு சொந்தமானது என்று போலீசார்விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த பெண் குழந்தையின் பிணம் வியாழக்கிழமை குப்பை தொட்டியில் கிடந்ததாகவும், நாய் கடித்த பின்பிணத்தை சாலையில் போட்டிருக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications