தலிபான்களிடம் பிடிபட்ட அமெரிக்கர்கள்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பல அமெரிக்கர்களை தலிபான் ராணுவம் கைது செய்துள்ளதாகபாகிஸ்தானிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதர் ப்துல் சயீப் கூறினார்.
பிடிபட்டவர்கள் அமெரிக்க ராணுவத்தினரா, உளவாளிகளா என்றும் தனக்குத் தெரியாது என அவர் கூறினார்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானுக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ஒரு ராணுவதளத்தை அமைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்தத் தளத்தில் 300 கமாண்டோக்கள் இருப்பார்கள்.இவர்களுக்கும் தளத்துக்கும் 600 ராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவர் என பென்டகனிலிருந்து வெளியாகும்செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக தலிபான்கள் மீது தாக்குதல் நடக்கும்.
இந் நிலையில் தலிபான்களின் முக்கிய நகரான காண்டார் மீது அமெரிக்க விமானங்கள் இன்று கடும் தாக்குதல்நடத்தின.












Click it and Unblock the Notifications