3 த.மா.கா. பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து மூன்று பிரமுகர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமாகாவைச் சேர்ந்த ஜோதி, முனவர் பாட்சா மற்றும் விஜயன் ஆகிய -மூன்று-நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு எதிராக புகார் கூறியிருந்தனர். இதையடுத்துஅவர்களை கட்சியிலிருந்து நீக்கி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மூன்று பேரும் கட்சியின் பெயருக்குகளங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதால் -மூவரையும் கட்சியின்அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
கட்சியினர் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றுகூறியுள்ளார்.
கட்சியின் தலைவரான பின்னர் வாசன் எடுத்திருக்கும் முதல் அதிரடி நடவடிக்கை இது தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications