அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் உண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையையொட்டி வழங்கப்படும் அட்வான்ஸ்(முன்பணம்) இந்த ஆண்டும் வழக்கம் போல வழங்கப்படும் என அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்திகூறியுள்ளார்.

இந்த ஆண்டு தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பண்டிகை முன்பணத்தை விநியோகிக்கவேண்டாம் என்று அரசு, மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அரசின் நிதி நிலை மோசமானது குறித்து எதிர்க்கட்சியான திமுக பெரியஅளவில் பொதுமக்களிடம்தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து வழக்கம் போல பண்டிகை முன்பணத்தை வழங்குமாறுஅரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி கூறுகையில்,

முன்பணம் தொடர்பாக நிதியமைச்சர் பொன்னையன் மற்றும் நிதித்துறை செயலாளர் சந்தானத்தை அரசு ஊழியர்சங்கப் பிரதிநிதிகள்சந்தித்துப் பேசினர். அதன்பிறகு, முன்பணத்தை வழங்க நிதியமைச்சர் பொன்னையன் ஒத்துக்கொண்டார்.

எனவே, நவம்பர் முதல் வாரம் முன்பணமான ரூ.1000 அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+