For Daily Alerts
Just In
மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறப்பு
தஞ்சை:
தஞ்சாவூர் பகுதியில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
காவிரி அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெற்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதுகுறித்து மேட்டூர் அணை பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைக்குத் தற்போது வினாடிக்கு 15,720 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணியிலிருந்து வினாடிக்கு10,809 கன அடித் தண்ணீர் பாசனத்திற்காகத் திறந்துவிடப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் அணையில் நீர் மட்டம் 12 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையின் மொத்த நீர் மட்டம் 80அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் அதன் மொத்தக் கொள்ளளவான 120 அடியாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, October 30, 2001, 5:30 [IST]