மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் பன்னீர்
மதுரை:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாலை அணிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்நிகழ்ச்சிகள் குருபூஜையாக செவ்வாய்க்கிழமை நடக்கின்றன.
தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சபாநாயகர்காளிமுத்துவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே மதுரை புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம்.
இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.பின்னர் கார் மூலம் பசும்பொன் கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடக்கும் குருபூஜை நிகழ்ச்சியில்பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.
மாலையில் தேவர் பிறந்த நாள் விழாவும், தேவர் புகைப்படக் கண்காட்சியும் நடைபெறுகின்றன. இதில்அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.