பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானதா "பொடோ"?
டெல்லி:
தீவிரவாத தடுப்புச் சட்டமான "பொடா"வில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளசட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும் என்று இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
தீவிரவாத தடுப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்தச்சட்டம் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இந்தச் சட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளசட்டப்பிரிவுகளை நீக்கவோ அல்லது திருத்தவோ மத்திய அர சு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்தியபத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) அந்த அமைப்பின் தலைவர் மேமன் மாத்யூ மற்றும் செயலாளர்அலோக் மேத்தா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளில்,பத்திரிக்கையாளர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்களைப் பேட்டி எடுக்கச் சென்றால் அதன் முழுவிவரத்தையும் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீவிரவாதிகள் அளித்த செய்திகளின்முழுவிவரத்தையும் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோல தீவிவாதிகளைச் சந்திக்க முற்படும் பத்திரிக்கையாளர்களை கைது செய்யவும் அந்தச் சட்டத்தில்இடமளிக்கப்பட்டுள்ளது.
இது பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் குறித்து ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள சட்டத்தை மீறுவதாக உள்ளது.எனவே இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசும் பாராளுமன்றமும் மீண்டும் பரிசீலித்து, அதை நீக்கவோ அல்லதுதிருத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிக்கைத் துறைக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசு எங்களைக்கலந்தாலோசிக்காதது அதிர்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
T Nagar: சீட்டே இல்லை! பதவி எதுக்கு? ராஜினாமா செய்த திநகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications