பொடோ சட்டத்தைத் திருத்த மத்திய அரசு மறுப்பு
டெல்லி:
தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் பத்ரிக்கையாளர்கள் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் எதுவும்குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே, அந்தச் சட்டத்தில் எதையும் நீக்கவோ, திருத்தவோ முடியாது என்றும்மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
தீவிரவாத தடுப்புச் சட்டம் (பொடா) என்ற புதிய சட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசுஇயற்றியுள்ளது. இந்தச் சட்டம் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில்நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இந்தச் சட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ள பிரிவுகளைநீக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டமைப்புகோரிக்கை விடுத்தது.
ஆனால், இதை ஏற்க மத்திய அரசு இதை மறுத்துவிட்டது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் போது, அவற்றைச் சமாளிக்க அசாதாரண சட்டங்கள் இயற்றப்பட வேண்டியஅவசியம் ஏற்படுகிறது. தீவிரவாதத்தால் நம் நாடு எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம்அறிவோம்.
இதுபோன்ற பிரச்சனைகளைச் சாதாரணச் சட்டங்களின் மூலம் தீர்க்க முடியாது என்பதை நாம் அனைவரும்உணரவேண்டும்.
பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கப் பலவழிகள் உள்ளன. இந்த விஷயத்தில் அவர்கள் தங்களுக்குள்ள மிகப்பெரிய பொறுப்பினை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications