"பொடோ"வை வாபஸ் பெற வேண்டும் என்கிறது தமுமுக
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
புதிதாக வந்துள்ள "பொடோ" சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இக்கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில்கூறப்பட்டிருப்பதாவது:
"பொடோ" சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
ஜனநாயகத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தச் சட்டத்தைஎதிர்க்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று இந்தக்கொடிய சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முன்வர வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்வதாகஅத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications