For Daily Alerts
Just In
குன்னூரில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
குன்னூர்:
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக இந்த ரயில் பாதையில் ரயில்போக்குவரத்து தொடர்ந்து தடைபட்டுள்ளது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே கல்லார் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை பெய்த பலத்த மழைகாரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்து தடைபட்டது.
தொடர்ந்து அங்கு நடந்து வரும் சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமைதான் முடிவடையும் என்று தெரிகிறது.
எனவே,வியாழக்கிழமை வரை ரயில் பாக்குவரத்துத் தொடங்குவது சாத்தியமில்லாத விஷயம் என்று ரயில்வேகூறியுள்ளது.
Comments
Story first published: Tuesday, October 30, 2001, 5:30 [IST]