கருவைக் கலைக்க வற்புறுத்திய கணவனுக்கு சிறை
சென்னை:
மனைவியிடம் கருவைக் கலைக்க வேண்டும் என்று வற்புறுத்திய கணவனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் ஜோயல்-சாந்தி தம்பதி. இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
திருமணம் செய்து சில மாதக்ளில் சாந்தி கருவுற்றார். ஆனால் ஜோயல் அதை விரும்பவில்லை. மனைவி மட்டும்இந்துவாக இருக்கலாம், ஆனால் தனக்குப் பிறக்கும் குழந்தை இந்துவாக இருக்கக் கூடாது என்பது ஜோயலின்கொள்கை.
இதனால் அவரும், அவரது தாயர் சுப்ரஜாபாலு ஆகியோர் சாந்தியிடம் கருவைக் கலைக்கும் படி வற்புறுத்திச்சித்ரவதை செய்தனர்.
இதைக்ண்டு வெறுத்த சாந்தி சென்னை ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார்ஜோயலையும், அவரது தாயாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜகோபால், ஜோயலுக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.மாமியார் சுப்ரஜாபாலுவை விடுதலை செய்தார்.