வளையலும் ஆண்மையும்: முஷாரப் குறித்து வாஜ்பாய் கிண்டல்
சோம்நாத்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தான் வளையல் அணிந்திருக்கவில்லை என்று சொன்னதுஆண்மைத்தனத்தைக் காட்டவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அதிபர் இந்தியா பற்றிப் பேசுகையில், இந்தியா தரும் எந்தஅச்சுறுத்தலையும் சமாளிக்கும் திறன் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. இதுகுறித்து பயப்படுவதற்கு நாங்கள் ஒன்றும்வளையல் அணிந்தவர்கள் அல்ல என்று கூறினார்.
இதற்கு அப்போதே நாங்களும் வளையல் அணிந்தவர்கள் இல்லை என் வாஜ்பாய் பதிலளித்துவிட்டார்.இந்நிலையில் குஜராத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,பாகிஸ்தான் அதிபரை மறைமுகமாகச் சாடினார் பிரதமர். இதுகுறித்து அவர் பேசியதாவது,
சிலர் நாங்கள் வளையல் அணிந்தவர்களல்ல என்று கூறுகிறார்கள். வளையலைப் பற்றிப் பேசுவதன் மூலம்,அவர்களது பேச்சில் ஆண்மைத் தனம் இல்லை என்பது விளங்குகிறது என்றார்.












Click it and Unblock the Notifications