மதுரை துணை மேயர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை
மதுரை:
மதுரை மாநகராட்சிக்கான துணை மேயர் தேர்தலின்போது கடும் வன்முறை வெடித்ததால் வாக்கு எண்ணிக்கைபாதிக்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை துவங்கிய துணை மேயர் தேர்தல் அமைதியாகத்தான் துவங்கியது. அமைதியாகவேநடந்தும் முடிந்தது.
ஆனால் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதுதான் வன்முறை வெடித்தது.
வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வாக்குச் சீட்டு செல்லாதது என்று திமுக உறுப்பினர் ஒருவர் கூறினார்.எதிர்க்கட்சியினர் அதை மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. திமுக, அதிமுக கட்சியினர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். மேஜைகளில் வைக்கப்பட்டிருந்த மைக்குகள் உடைக்கப்பட்டன.
இதனால் மதுரை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் போர்க்களம் போலக் காட்சியளித்தது.
இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரக்காரர்களைப் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
இதனால் வாக்கு எண்ணிக்கை தடை பட்டது. தமிழகத்தின் மற்ற 5 மாநகராட்சிகளுக்கான துணை மேயர்முடிவுகளும் வந்துள்ள நிலையில் மதுரை மாநகராட்சிக்கு மட்டும்தான் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications