ஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்சி: புதிய திட்டம் தயார்
ஜபல் சிராஜ் (வடக்கு ஆப்கானிஸ்தான்):
ஆப்கானிஸ்தானில் நார்தர்ன் அலையன்ஸ் படையினரும் முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவும் இணைந்து அடுத்தஆட்சியை அமைக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து அமெரிக்கா தொடங்கி வைத்த நார்த்தர்ன் அலையன்ஸ் மற்றும் ஷகீர் ஷா இடையிலானபேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி இரு பிரிவினரும் இணைந்து 120 பேர் கொண்ட ஒரு சுப்ரீம் கவுன்சிலைஅமைப்பார்கள். இந்தக் கவுன்சில் மதத் தலைவர்களான உலமாக்கள் அடங்கிய ஒரு அமைப்பை ஏற்படுத்தும்.
நாட்டுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பும் இந்த சுப்ரீம் கவுன்சிடம் தரப்படும். அரசியல்சட்டத்தை உருவாக்கிய பின்னர் அடுத்த ஆட்சியை இந்த கவுன்சில் அமைக்கும்.
இந்தக் கவுன்சிலில் யார் அதிக இடம் பிடிக்கிறார்களோ அவர்களின் கட்டுப்பாட்டில் தான் அடுத்த ஆட்சி இருக்கும்என்பதால் நார்த்தன்ஸ் அலையன்சும், ஷகீர் ஷாவும் தங்கள் பிரதிநிதிகளை அதிக அளவில் இதில் இடம் பெறச்செய்யும் போட்டியில் இறங்கியுள்ளனர்.
ஷகீர் ஷா புஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர். இந்த இனத்தினர் தான் ஆப்கானிஸ்தானில் 50 சதவீதத்துக்கும்அதிகமாக வசிக்கின்றனர். தலிபான்களும் புஷ்தூன்கள் தான்.
நார்த்தர்ன் அலையன் படையினர் உஸ்பெக், தஜிக், ஹஸாரா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களின்மக்கள் தொகை 40 சதவீதம்.
எனவே, இந்த இரு தரப்பினரும் இணைந்து அமைக்கும் ஆட்சி தான் நிலையானதாக ஆப்கானிஸ்தானுக்குப்பொறுத்தமானதாக இருக்கும்.