பொடோவுக்கு வைகோ ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடோ சட்டத்தை வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமான பொடோவைமதிமுக வரவேற்கிறது. இது ஒரு அவசியமான சட்டம் என்று நாங்கள் கருதுகிறோம்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டோம். இருந்தும், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் எங்களதுவேட்பாளர்களுக்கு மக்கள் நல்ல ஆதரவைத் தந்துள்ளார்கள். இது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications