ஜனநாயகத்தில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை - கருணாநிதி
சென்னை:
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி மன்றக் கூட்டங்களை நடத்த ஆளுங்கட்சியினர் தயாராக இல்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர் மேலும்கூறியதாவது,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் பயங்கரமான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.ஜனநாயகத்திற்கு விரோதமாக அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்ட வன்முறைச் சம்பவங்களைப் பட்டியலிடவே முடியாது. அந்தஅளவுக்கு பல இடங்களிலும் வன்முறைகள் நடந்துள்ளன.
இந்தச் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, உள்ளாட்சி மன்றக் கூட்டங்களை ஆளுங்கட்சியினர் அமைதியாகஜனநாயக முறைப்படி நடத்த விடமாட்டார்கள் என்று தெரிகிறது.
ஜனநாயக அறநெறியை விட்டு அகலராமல் இருக்க வேண்டும் என்றுதான் திமுக விரும்புகிறது என்றார் கருணாநிதி.