கொலை முயற்சி: தப்பினார் ஹுரியத் தலைவர்
ஸ்ரீநகர்:
ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர் அப்துல் கானி லோனை கொலை செய்ய குறிவைத்து நடந்த தாக்குதலில் அவர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஹுரியத் கான்பரன்ஸ் அமைப்பின் மூத்த தலைவரான லோன் தனது குடும்பத்தாருடன் ஸ்ரீநகரில் வசித்துவருகிறார். அவரது வீடு ஸ்ரீநகரில் சனத் நகரில் உள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.10 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் அவர் வீட்டின்மீது துப்பாக்கி மூலம் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் மீதிருந்த தண்ணீர் தொட்டி உடைந்தது. பாதுகாப்புகாவலர்கள் அறையும் இந்த துப்பாக்கி சூட்டில் சேதமடைந்தது.
துப்பாக்கி சூடு நடந்த போது லோன் தனது குடும்பத்தாருடன் வீட்டுக்குள்தான் இருந்தார். ஆனாலும் அவரும்,அவரது குடும்பத்தாரும் எந்த விதமான காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று (வெள்ளிக்கிழமை) லோன் நிருபர்களிடம் கூறுகையில், என் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுபயங்கரமானது. நானும், எனது குடும்பத்தாரும் உயிர் தப்பியது அதிசயம்தான் என்றார்.
இந்த தாக்குதலுக்கு எந்த விதமான தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் அல் பாடார்தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள்கருதுகின்றனர்.
தீவிரவாதிகள் அமைப்பின் மூலம் லோன் சேர்த்துள்ள சொத்துக்களை திரும்ப ஒப்படைக்குமாறு அல் படார்அமைப்பு அவரை கேட்டுக் கொண்டது. ஆனாலும் ஹுரியத் அமைப்பு தங்களுக்கும், தீவிரவாதஅமைப்புகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மறுத்து வந்தது.
எனவே, லோன் மீது கோபம் கொண்டு அல் படார் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும்என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications