தலிபான்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆயுத உதவி
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் இருந்து தலிபான்களுக்கு இன்னும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறைகூறியுள்ளதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து, எல்லைப் புறநகரமான சாமன் நகருக்கு ஆயுதங்கள், எரிபொருட்கள் மற்றும்பல பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து தலிபான்களின் முக்கிய நகரமான காண்டஹாருக்குஇரவோடு இரவாக டிரக்குகள் மூலம் ரகசியமாகக் கடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியது.
இந்தச் செய்தியை வாஷிங்டன் போஸ்ட் நாளிதளும் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்கஅதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் தனது நாட்டு எல்லையைஇரண்டு விதமாகக் கண்காணித்து வருகிறது. பகலில் ஒரு விதமாகவும், இரவில் ஒரு விதமாகவும் அந்நாட்டுஎல்லை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தலிபான்களுக்கு இரவு நேரங்களில் பாகிஸ்தான் ஆயுதங்களை அளித்து வருகிறது என்று இந்திய உளவுத்துறைவெளியிட்ட செய்தி உண்மையானதுதான். பாகிஸ்தான் இந்த விஷயத்தில் டபுள்கேம் ஆடுகிறது என்றார்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இதைக் கடுமையாக மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அரசுக்குத் தெரிந்துதலிபான்களுக்கு ஆயுதங்கள் அளிக்கப்படவில்லை. யாராவது தனிநபரோ, அல்லது இயக்கமோ தலிபான்களுக்குஆயுத உதவிகள் அளித்திருக்கலாம் என்று கூறியுள்ளது.
ஆனால் சமீப காலமாக பாகிஸ்தானிய அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அமெரிக்காவின் முயற்சிகளுக்குஎதிராகச் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் இந்த விஷயத்தில் நாடகமாடி வருவதால் அமெரிக்க அதிபர் புஷ் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications