வெளிநாடுகளில் போலி இந்திய பாஸ்போர்ட்கள் விற்பனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடாக இந்திய பாஸ்போர்ட்கள் விற்கப்பட்டுவருவதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அதிகாரி மீதும் சில ஏஜெண்டுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கயானாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த பி.எஸ்.மாத்தூர் பலருக்கும் பாஸ்போர்ட்களைவிற்றுள்ளார். பணத்துக்காக போலி ஆவணங்களை வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்துக்குத் தான் முதலில் தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரில்தான் மாத்தூர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாகத்தெரிகிறது.
இது போல மும்பையில் வாங்கப்பட்ட போலியான பாஸ்போர்ட் மூலம் தான் 1999ம் ஆண்டு தீவிரவாதிகள் மும்பைவழியாக நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திச் சென்றனர்.












Click it and Unblock the Notifications