"சென்னை சாலைகளின் பரிதாப நிலைக்கு ஸ்டாலின்தான் காரணம்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரச் சாலைகள் மோசமாகக் காட்சியளிப்பதற்கு ஸ்டாலின் தான் காரணம் என்று தமிழக மின்துறைஅமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நேற்று (வியாழக்கிழமை) சென்னையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்டாலின் கடந்த முறை மேயராக இருந்தபோது திமுக ஆட்சிதான் இருந்தது. ஆனால் ஸ்டாலினின் நிர்வாகத்திறமையின்மை காரணமாக சென்னை நகரச் சாலைகள் அனைத்தும் சரியாகப் பராமரிக்கப்படவில்லை.
ஆனால் அதற்கு எங்களைக் குறைகூறுகிறார்கள். பணத்தைச் செலவிட்டும் தரமான சாலைகளை திமுகவினர்போடவில்லை. சென்னை நகரில் சாலைகளின் பரிதாப நிலைக்கு ஸ்டாலினே காரணம்.
தற்போது ஆட்சி அதிமுகவினர் வசம் உள்ளது. எனவே சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று அந்தஅறிக்கையில் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications