எங்கள் அணு மையங்கள் பத்திரமாக உள்ளன: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள அணு மையங்கள் பத்திரமாக உள்ளன என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்சத்தார் கூறியுள்ளார்.
அல்-கொய்தா இயக்கத்தினர் பாகிஸ்தானில் உள்ள அணு மையங்களைக் கைப்பற்றி அங்குள்ளஅணுகுண்டுகளையும் கடத்திக் கொண்டு போகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதைப் பாகிஸ்தான் கடுமையாக மறுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள அணு சக்தி ஆராய்ச்சி மையங்கள்,அணு மின் நிலையங்கள், அணு ஆயுதக் கூடங்கள் மிகவும் பத்திரமாக உள்ளன என்று அப்துல் சத்தார் கூறியுள்ளார்.
அல்-கொய்தா அமைப்பினர் எங்களிடமிருந்து அணு குண்டுகளைக் கைப்பற்றப் போவதாக வந்த செய்திகள்முற்றிலும் கற்பனையானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அணு மையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து எந்த ஒரு சிறிய பொருளைக்கூட யாரும் வெளியே கொண்டு செல்ல முடியாத அளவுக்குப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றும்சத்தார் கூறினார்.
சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதங்களைத் தந்து உதவி வரும் பயங்கரமான சூழ்நிலை நிலவி வருகிறதுஎன்றும் தங்களை எதிர்க்கும் நாடுகளின் அணு மையங்களை தாக்கும் செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபடலாம்என்றும் சர்வதேச அணு சக்தி கமிஷனின் டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல்பராடி எச்சரித்திருந்த சில மணிநேரத்திலேயே அப்துல் சத்தார் பதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications