தீபாவளி முன் பணம் கேட்டு மேட்டூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மேட்டூர்:
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு ஊழியர்கள் நேற்று(வியாழக்கிழமை) மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசு ஊழியர்களுக்குமுன் பணம் வழங்கப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே இந்த முன் பணம்வழங்கப்பட்டுவிடும்.
ஆனால் இந்த ஆண்டு நிதி நிலை நெருக்கடி காரணமாக முன் பணம் வழங்கப்படவில்லை. கடை நிலைஊழியர்களுக்கு மட்டும் முன் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் மேட்டூரில் தமிழக அரசு ஊழியர் ஒன்றிய அமைப்பின் உறுப்பினர்கள் மேட்டூர் வட்டாட்சியர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உடனடியாக பண்டிகை முன் பணம் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள்எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதற்குஇணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைபடி உயர்த்தி கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இன்றுவரை அரசு அகவிலைபடியை உயர்த்தவில்லை. இது குறித்து நாங்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான பலனும் இல்லை.
அரசு உடனே தீபாவளி பண்டிகைக்கான முன் பணம் வழங்க வேண்டும். அகவிலை படியையும் உயர்த்த வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications