4 இணை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சில இணை அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவதற்கு பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து சிறு தொழில் நிறுவனங்கள், அணு சக்தி உள்பட பல இலாகாக்களைக் கவனித்துக் கொண்டிருந்தவசுந்தரா, இனி திட்டக் கமிஷன் இணை அமைச்சராகவும் இருப்பார்.
கப்பல் போக்குவரத்துத் துறையைக் கவனித்து வந்த முகுந்த் தேவ் நாராயணா, இனி விவசாயத் துறை இணைஅமைச்சராகவுள்ளார்.
இதனால் விவசாயத் துறையைக் கவனித்து வந்த ஸ்ரீபட் யஸ்ஸோ நாயக் கப்பல் போக்குவரத்துத் துறைஇலாகாவைக் கவனித்துக் கொள்வார்.
அமிர்தசரசில் நடந்து கொண்டிருக்கும் பாஜக மாநாட்டில் வாஜ்பாய் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications