கரு ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்தால் கடும் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று ஸ்கேன் செய்து தெரிவிப்பவர்கள் குறித்து தகவலோ,புகாரோ கொடுத்தால், ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துள்ளதால், கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை ஸ்கேன்கருவியை பயன்படுத்தி தெரிந்து கொள்வதில் பெரும்பாலோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் பெண் குழந்தைை வேண்டாம் என்பவர்கள் கருச் சிதைவு செய்து கருவிலேயே அந்த சிசுவை கொலைசெய்துவிடும் மகாபாதக செயலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசின் அங்கீகாரம் பெறாமல் பல ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ஸ்கேன்கருவியை பயன்படுத்தி கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிவிக்கிறார்கள். இதுசட்டப்படி குற்றமாகும்.

இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள்இயக்குனர் அலுவலகங்களிலும், அனைத்து மாவட்டஙகளிலும் உள்ள சுகாதார நல பணிகள் துறையின் மாவட்டஇணை இயக்குனர் அலுவலகங்களிலும், அனைத்து தாலுகா மருத்துவ அலுவலரிடமும் தகவல் தெரிவிக்கலாம்என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+