ஆயுதங்களுடன் ஆப்கானுக்குள் நுழையும் பாக். பழங்குடியினர்
இஸ்லாமாபாத்:
தலிபான் படைகளுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டபழங்குடியினர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர்.
இவர்களை பாகிஸ்தான் அரசு தடுத்தது. இதையடுத்து பாகிஸதான்-சீனநெடுஞ்சாலையையும், எல்லையில் இருந்த பாகிஸ்தானின் விமானத் தளத்தையும்இந்தப் பழங்குடியினர் கைப்பற்றினர். அவர்களிடம் பேச்சு நடத்தி சாலையை மட்டும்அரசு மீட்டுள்ளது.
இந் நிலையில் இவர்களில் சுமார் 1,200 பேர் பாகிஸ்தான் ராணுவத்தையும் மீறிஆப்கானிஸ்தானுக்குள் புகுந்துவிட்டனர் என்று டெஹ்ரீக் நிஃபாஸ்-ஏ-ஷரியத் முகமதிஎன்ற மதவாதக் கட்சி கூறியுள்ளது.
இக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபைஜுல்லா பரூக் கூறுகையில், மாலிக் ஜான்முகமது தலைமையில் 1,200 பழங்குடியினர் தலிபான் படைக்கு உதவஆப்கானிஸ்தானுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் 50 வண்டிகளில் ஆயுதங்களுடன்இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பாஜாவுரிலிருந்து புறப்பட்-டு சென்றனர்.
வியாழக்கிழமையும் ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications