சினிமா விருதுகள்: நீதிபதி தலைமையில் 12 பேர் குழு அமைப்பு
சென்னை:
2000-மாவது ஆண்டுக்கான தமிழ் சினிமா விருதுக்குரிய கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன்தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நீதிபதி ஜெகதீசன் தலைமையிலான இக்குழுவில் நடிகர் ராகவன், ராதாரவி, நடிகைகள் ராஜ சுலோச்சனா, சச்சு, மலேசியா வாசுதேவன்,டைரக்டர் பி.வாசு, இசையமைப்பாளர் சந்திரபோஸ் உள்ளிட்ட 12 பேர் அடங்கியுள்ளனர்.
இக்குழுவினர் 2000-மாவது ஆண்டுக்கான சிறந்த திரைக் கலைஞர்களைத் தேர்வு செய்து அரசிடம் பரிந்துரைப்பர். அதன்படி விருதுகள்வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநரிடம்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இந்த மாதம் 20ம் தேதி முதல் விற்கப்படும்.
அடுத்த மாதம் 6ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications