காண்டஹாரில் தலை காட்டிய பின்லேடன்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
காண்டஹாரில் உள்ள அரேபிய தீவிரவாதிகள் இடையே ஒசாமா பின் லேடன் சில நாட்களுக்கு முன் வீரஉரையாற்றியதாக பாகிஸ்தானிய பத்திரிக்கை கூறியுள்ளது.
சில தினங்களுக்கு முன் இரவில் காண்டஹார் நகருக்கு பின் லேடன் தனது பாதுகாவலர்களுடன் திடீரென வந்தார்.அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரேபிய தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் இடையே அவர்உரையாற்றினார்.
பின்னர் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிட்டார். அவர் காண்டஹார் அருகே உள்ள மிகப் பெரிய குகையில்தான் தங்கியிருக்கிறார்.
இந்த நகரின் மீது கடந்த சில நாட்களாக கார்ப்பெட் பாம்கள் எனப்படும் தொகுப்பு குண்டுகளை வீசி அமெரிக்கவிமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நகர் தான் தலிபான்களின் தலைவர் முல்லா ஒமர் வசித்து வந்தஇடமாகும்.












Click it and Unblock the Notifications