கரூர் அருகே தூக்கில் தொங்கிய காதல்ஜோடி- தற்கொலையா?
கரூர்:
கரூருக்கு அருகேயுள்ள மலை பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் தூக்கில் தொங்கியநிலையில் பிணமாக இருந்தனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டார்களா அல்லதுதற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் காமாட்சி மலை உச்சிதெற்கு அய்யம்பாளையம் என்ற இடத்திலுள்ள மலைபகுதியில் ஒரு ஆணும்,பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டனர்.
இதை பார்த்த வன காவலர் மாணிக்கம், பி.இடையப்பட்டி கிராம நிர்வாகியிடம் தகவல்கூறினார். அவர் உடனடியாக பாலவிடுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கிய பிணங்களை கைப்பற்றிவிசாரணை நடத்தினர்.
பிணமாக இருந்தவர்களில் வாலிபர் தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சிவா என்கிறதுரைசாமி (வயது 25) என்பதும், அவர் தற்போது மணப்பாறை மலையம்பட்டியில் வசித்துவந்ததும் விசாரணையின் போது தெரிய வந்தது.
பிணமாக இருந்த பெண் யார் என்பதும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும்தெரியவில்லை.
இவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது இவர்களை யாராவது கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைசெய்து வருகிறனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications