For Daily Alerts
Just In
29ம் தேதி மாநகராட்சி மண்டல குழு தேர்தல்
சென்னை:
சென்னை மாநகராட்சி மண்டல குழுக்களுக்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தற்போது மண்டல குழுக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். சென்னைமாநகராட்சியில் மொத்தம் 10 மண்டலங்கள் உள்ளன. இதற்கான தலைவர்களை சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்குட்பட்ட கவுன்சிலர்கள்தேர்வு செய்வர்.
இதுதவிர நிதிக்குழு, நிலைக்குழு ஆகியவற்றிற்கான தேர்தலும் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை மாநகராட்சி ஆணையர்ஆச்சார்யலு நடத்தி வைப்பார்.
இதற்கிடையே, மாநகராட்சி திமுக மற்றும் அதிமுக தலைவர் தேர்வு தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகின்றனர்.
Story first published: Saturday, November 3, 2001, 5:30 [IST]