டான்சி விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு- சுவாமி
சென்னை:
டான்சி நிலத்தை விற்பனை செய்யவேண்டும் என்று முடிவு செய்த எல்லா இயக்குநர்கள் மீதும் உயர்நீதிமன்றம்விரும்பினால் வழக்குப் போடலாம் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறினார்.
சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர் மேலும்கூறியதாவது,
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு சதிதிட்டத்தில் ஆடுபட்டு அரசு நிலத்தை குறைந்த விலைக்குவிற்பனை செய்துள்ளனர் என்று நான் எனது மனுவில்கூறியுள்ளேன். இந்த மனுவை கவனத்தில்எடுத்துக்கொள்வதாக நீதிபதியும் கூறியுள்ளார்.
நிலத்தை வாங்கும் பத்திரத்தில் பங்குதாரர்கள் கையெழுத்துப் போடாவிட்டால் அது செல்லாது. எனவேஜெயலலிதாவும் கண்டிப்பாகக் கையெழுத்துப் போட்டிருப்பார். ஆனால் அவர் கையெழுத்துப் போடவில்லைஎன்று கூறிவருகிறார். இதை உயர் நீதிமன்றம் ஏற்காது.
டான்சி நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்த இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துஇயக்குனர்கள் மீதும் வழக்குப் போடலாம்.
இதுகுறித்து உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்.
இவ்வாறு சுவாமி தனது பேட்டியில் கூறினார்.












Click it and Unblock the Notifications