காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்கி 4 ராணுவ வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

தீவிரவாதிகளின் தற்கொலைப்படையினர் ராணுவ முகாமுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள்கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் நேற்றிரவு (சனிக்கிழமை) 2தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் லஸ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தில் உள்ள தற்கொலைப் படையினர் ஆவர்.

நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் இருவரும் ஒரு மரப்பெட்டிக்குள் மறைந்துகொண்டு ராணுவவீரர்கள் மீதுதுப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். பதிலுக்கு இராணுவத்தினரும் சுட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 4வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

சண்டை ஓய்ந்த பிறகு ராணுவ முகாமிற்குள் புகுந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க வீரர்கள் தேடுதல் வேட்டைநடத்தினர்.

அப்போது ஒரு மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீதுராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.

படுகாயமடைந்த மற்றொருவனை இன்னும் பிடிக்க முடியவில்லை. அவன் இன்னும் ராணுவ முகாமிற்குள்தான்ஒளிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் எங்கள் அமைப்பின் தற்கொலைப்படையினர் தான்என்றும் அவர்கள் பெயர் அபு ஹாசிம் மற்றும் அபு முஸ்லீம் என்றும் லஸ்கர்-ஏ-தொய்பா அறிவித்துள்ளது.

22 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

கடந்த ஒரு நாளில் காஷ்மீர் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சண்டையில் 22 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். மேலும் 6 பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சண்டையில்அப்பகுதியில் வாழும் ஒரு அப்பாவியும் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையைக் கடக்க முயன்ற 10 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான்பிடித்துவைத்துள்ள காஷ்மீருக்குள் சென்று தீவிரவாதப் பயிற்சியில் ஈடுபடச் சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன், டெஹ்ரீக்-ஏ- ஜிகாதி இஸ்லாமி மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன்ஆகிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதேபோல பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த தாக்குதலில் குப்வாராமாவட்டத்தில் 2 பேரும், தோடா மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் மற்ற பகுதிகளில் நடந்தசண்டைகளில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்ச்ை சேர்ந்த குல்சார் அஹமது என்பவர் ராணுவத்தினருக்கு துப்பு கொடுப்பதாகக் கூறி, அவரைதீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+