300 பேரைக் கொடூரமாகக் கொன்ற தலிபான்கள்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

40 டிகிரி வெப்பத்தில் இரும்பை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் கண்டெய்னர்களுக்குள் வைத்து, அளவுக்குநார்தர்ன் அலையன்ஸ் ஆதரவாளர்கள் (ஆப்கான் பொதுமக்கள்) 300 பேரை தலிபான்கள்படுகொலைசெய்துள்ளனர் என்று பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.

அதிரவைக்கும் இந்தச் செய்திகுறித்த அவ்வாறு பாதிக்கப்பட்டு, மீண்டவர் ஒருவர் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் நார்தர்ன் அலையன்ஸ் படை ஆதரவாளர்கள் தலிபான் படையினரால் வெட்டிக்கொல்லப்படுகிறார்கள். இதுபோல வடக்கு ஆப்கானில் உள்ள டாலகான் என்ற இடத்தில் ஆட்டு மந்தையைப் போல500க்கும் மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர்.

அவர்களின் மனைவிகள் மற்றும், குழந்தைகள் கண் முன்னால் அவர்கள் பெரும் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.பிறகு அவர்கள் அனைரும் லாரிகளில் ஏறறப்பட்டு, அருகில் உள்ள கொண்டஸ் என்ற இடத்தில் உள்ள சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டார்கள்.

பிறகு அங்கு 20 - 20 பேராகப் பிரித்து ஒரு கண்டெய்னருக்குள் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் அந்தக்கண்டெய்னருக்குள்ளேயே 5 மாதங்கள் வரை வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் பல உறவினர்கள்உள்ளுக்குள்ளேயே செத்து மடிந்தார்கள்.

உள்ளே அடைக்கப்பட்டவர்களுக்கு, மிகக் குறைவான அளவில் பிரட்டும், தண்ணீரும் கொடுக்கப்பட்டது.

நானும் இதைப்போல ஒரு கண்டெய்னருக்குள் தள்ளப்பட்டு, கடந்த 5 மாதங்களாக உள்ளே அடைபட்டுக்கிடந்தேன். இவ்வாறு அடைக்கப்பட்ட 500 பேர்களில், 200 பேர் தான், அந்தக் கொடிய சூட்டையும் (40 டிகிரி)பொறுத்துக்கொண்டு உயர் தப்பினோம்.

இவ்வாறு அவர்கூறினார். அவர் தனது பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார்.

தரைப்படை குவிப்பு

ஆப்கானில் ஏற்கனவே உள்ளதைப் போல இரண்டரை மடங்கு ராணுவத்தினர் குவிக்ப்பட்டுள்ளனர் என்றுஅமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்டு கூறினார்.

ஆரம்பத்தில் ஆப்கானில் சில நூறு வீரர்கள் தான், 2 இடங்களில் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது, அதில்இரண்டரை மடங்கு அதிகமான அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 அல்லது அதற்கும்மேற்பட்ட இடங்களில் குவிக்கப்படுவார்கள் என்றார் ரம்ஸ்பீல்டு.

தொடர்கிறது விமானத் தாக்குதல்

இதற்கிடையே தலிபான்கள் நிலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றன.

தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருக்கும் வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கடந்த பத்து நாட்களில் ஆறாவதுமுறையாக அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. உயரமாகப் பறந்து தாக்கவல்ல பி-52 ரகவிமானங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+