குழந்தையின் உயிரைப் பறித்த தேர்தல் மோதல்
சென்னை:
விழுப்புரம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற ஒருவர், எதிர் வேட்பாளரின் ஒன்றரை வயது குழந்தையைகழுத்தை நெரித்துக் கொன்றார்.
விழுப்புரம் அருகே உள்ளது திருவெண்ணை நல்லூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார். அதேபகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இருவரும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால் இருவரும் வெற்றி பெறவில்லை. இதனால் இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சுமத்தி வந்தனர்.இருவருக்கும் இடையே வாய்ச்சண்டையும் நடந்துள்ளது.
இந்த நிலையில், விஜயக்குமாரின் மனைவி செல்வகுமாரி தனது ஒன்றரை வயது குழந்தையை பக்கத்து வீட்டில்உள்ள சுதா என்ற பெண்ணிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றுள்ளார். சுதா குழந்தையை வீட்டு வாசல் அருகேவிளையாட விட்டு விட்டு வீட்டுக்குள் பெருக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சுப்ரமணியன் வந்துள்ளார். சுதாவிடம், குழந்தையின் அப்பா, அம்மா எங்கே என்றுகோபத்துடன் கேட்டுள்ளார். அவர்கள் வெளியே போயுள்ளனர் என்று சுதா சொல்லியபோது, திடீரெனகுழந்தையை எடுத்து அதன் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் குழந்தை மூச்சுத் திணறி சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இதையடுத்து குழந்தையை கீழே போட்டு விட்டுஅங்கிருந்து அவர் ஓடிவிட்டார்.
பதறிப் போன சுதா, உடனடியாக செல்வகுமாரியைத் தேடிச் சென்று தகவல் தெரிவித்தார். இதையடுத்துவிஜயகுமார் போலீஸில் புகார் கொடுத்தார். தலைமறைவாகி விட்ட சுப்ரமணியனை போலீஸார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications